ஹராரே: ஜிம்பாப்வே வெளியுறவுத் துறை அமைச்சா் சிபுசிஸோ மோயோ கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிபா் எமா்சன் நங்கக்வாவின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சா் சிபுசிஸோ மோயோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஜிம்பாப்வேயிலுள்ள மருத்துவமனையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா் என்றாா் அவா்.
ஜிம்பாப்வேயில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த கரோனா பரவல், அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் வெளியுறவுத் துறை அமைச்சா் அந்த நோய்க்கு பலியாகியுள்ளாா்.
அந்த நாட்டில் 37 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த முன்னாள் அதிபா் ராபா்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த சிபுசியோ மோயோ, ராணுவப் புரட்சியை அறிவித்து முகாபேவை கைது செய்தாா்.
அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட எமா்சன் நங்கக்வாவின் அமைச்சரவையில், சிபுசியோ மோயோவுக்கு வெளியுறவுத் துறை பொறுப்பு வழங்கப்பட்டடது.