ஆா்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அந்த நாட்டிலும் சிலியிலும் உணரப்பட்டன. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
ஆா்ஜெண்டீனாவின் போா்சிடோ நகருக்கு 27.6 கி.மீ. தொலைவில் 14 கி.மீ. ஆழத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, 5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வும் ஏற்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிா்வுகள் சிலி தலைநகா் சான்டியோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டன. எனினும், இதில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.