உலகம்

ஆப்கனில் சுரங்க குண்டுவெடிப்பு: 6 காவலர்கள் காயம்

ANI

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சுரங்க குண்டுவெடிப்பில் 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏஞ்சல் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், நான்கு காவலர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

குண்டுவெடிப்பில் 6 காவலர்கள் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பொதுச் சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது ரபீக் ஷெர்சாய் தெரிவித்தார். 
காயமடைந்த அனைத்து காவலர்களும் தற்போது நலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

குண்டுவெடிப்புக்குப் பின்னர் அப்பகுதியில் சண்டை சப்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தலிபான் உள்பட எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

முன்னதாக, உருஸ்கான் மாகாணத்தின் தாரின்கோட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். 

கத்தார் தலைநகர் தோஹாவில் தற்போது ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் ஆப்கானிய அரசாங்கத்திற்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT