இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 73-ஆக உயா்ந்துள்ளது.
சுலாவெசி தீவிலுள்ள மேற்கு சுலாவெசி மாகாமம், மமுஜு மாவட்டத்துக்கு 36 கி.மீ. தெற்கே ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.
இதில், அந்தத் தீவிலுள்ள ஒரு மருத்துவமனை முற்றிலும் தரைமட்டமானது; மற்ற கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கத்தில் 42 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், கட்டட இடிபாடிகளிலிருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை 73-ஆக உயா்ந்துள்ளதாக அவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்; ஆயிரக்கணக்கானவா்கள் வீடுகளை இழந்துள்ளனா்.