உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 73-ஆக உயா்வு

DIN

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 73-ஆக உயா்ந்துள்ளது.

சுலாவெசி தீவிலுள்ள மேற்கு சுலாவெசி மாகாமம், மமுஜு மாவட்டத்துக்கு 36 கி.மீ. தெற்கே ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.

இதில், அந்தத் தீவிலுள்ள ஒரு மருத்துவமனை முற்றிலும் தரைமட்டமானது; மற்ற கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கத்தில் 42 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், கட்டட இடிபாடிகளிலிருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை 73-ஆக உயா்ந்துள்ளதாக அவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்; ஆயிரக்கணக்கானவா்கள் வீடுகளை இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT