கரோனா பரவலைத் தடுப்பதற்காக பாகிஸ்தானில் மூடப்பட்டுள்ள இடைநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டு மத்திய கல்வித் துறை அமைச்சா் ஷாஃப்கத் மஹ்மூத் தெரிவித்துள்ளாா். தொடக்கநிலைப் பள்ளிகள் பிப். 1 முதல் தொடங்கும் என அவா் கூறியுள்ளாா்.