இந்தோனேசியாவில் புதிய உச்சமாக சனிக்கிழமை 14,224 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,96,642 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 283 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர், 8,662 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 25,767 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 7,27,358 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஜகார்த்தாவில் 3,536 பேரும், மேற்கு ஜாவாவில் 3,460 பேரும், மத்திய ஜாவாவில் 1,997 பேரும், கிழக்கு ஜாவாவில் 1,160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.