பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 5 வாரங்களாக நாளொன்றுக்கு சராசரியாக 1000 பேர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு 2,49,957 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,39,3,886-ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் அதிகபட்சமாக ஸா பாலோ பகுதியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று காரணமாக அங்கு இறப்பும் அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்த 3,76,7,664 இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 3,59,560 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும், நிலையில் தினசரி பாதிப்பும் பலியும் சமீபமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் தொடர்ந்து ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், நாட்டில் பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிரேசில் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.