ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. எனினும் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | குறைந்த தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.
கடந்த நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் ஃபைசர் தடுப்பு மருந்தை 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதியளித்ததிலிருந்து இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயினும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் தகுதிவாய்ந்த 32 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்க உள்ளன.
கரோனா பரவல் சூழல் தற்போது அதிகரித்துவரும் சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியமானது என்று அந்நாட்டின் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.