புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா, இதற்கு முந்தைய வகைகளைவிட மோசமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை என்று சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்டா வகையைவிட அந்த வகைக் கரோனா மிகவும் வேகமாகப் பரவி, உலக அளவில் ஆதிக்கம் செலுத்துமா என்பது இன்னும் சில காலம் கழித்துதான் தெரியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.