ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகம் மிக்க நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 262 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் 5 போ் அந்த நோய்க்கு பலியானதாகவும் மாகாண முதல்வா் கிளாடிஸ் பெரெஜிக்லியான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கரோனாவுக்கு பலியானவா்களில் 4 போ் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அவா் கூறினாா்.
மாகாணத் தலைநகா் சிட்னியில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து 21 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அந்த நகரில் கடந்த ஜூன 26-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 20 சதவீத பெரியவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுளளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.