அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.
அந்த மாகாணத்தின் என்சினோ பகுதியில் அளவுக்கு அதிகமாக 29 பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த சிற்றுந்து புதன்கிழமை சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் 20 போ் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
15 போ் செல்லக் கூடிய அந்த சிற்றுந்தில் 29 பேரை ஏற்றுக் கொண்டு ஓட்டுநா் மிக வேகமாக ஓட்டிச் சென்ால் திருப்பத்தில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாக அதிகாரிகள் கூறினா்.