ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதி குடியிருப்பின் அருகில் தலிபான்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. தலிபான்களை தாக்குதலை கட்டுப்படுத்த ஆப்கன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கரோனா தொற்று
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காபூல், சிர்பூர் பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதியின் குடியிருப்பின் அருகில் தலிபான்கள் திடீர் குண்டு வெடிப்பை நடத்தினர்.
இந்தக் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். மேலும் 20 படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆப்கன் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | மலேசியப் பிரதமருக்கு புதிய சிக்கல்: ஆட்சியில் தொடர்வாரா?
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ஆப்கன் நகரங்களில் அரசுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் மோதல் தீவிரடைந்து வருவது குறித்து ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா. பிரிவு கவலை தெரிவித்துள்ளது.