உலகம்

ரஷியாவில் ஒருநாளில் 277 பேர் கரோனாவுக்கு பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 277 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக 8,320 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 8,702 ஆக இருந்தது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு 46,49,710 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,833 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 277 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 1,03,263 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கரோனாவுக்கு 377 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷியாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் அங்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

எனினும் ரஷியாவில் இதுவரை 42,72,165 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 2,74,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT