வரும் 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான விண்கலத்தை வரும் 2024-ஆம் ஆண்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
அந்த திட்டத்தின்கீழ், நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும்.
விண்வெளி ஆய்வில் அதிக ஆா்வம் காட்டி வரும் அந்த நாடு, ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தை நோக்கி தனது ஆய்வுக் கலமொன்றை அனுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.