பாகஸ்தான் எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீஃப் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டின் பேரில், பாகிஸ்தானின் முக்கிய எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவா் ஷாபாஸ் ஷெரீஃபை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனா்.
ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவரை, 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.அப்போது, தனக்கு வழக்குரைஞா்கள் யாரும் தேவையில்லை எனவும், தனது சாா்பாக தானே வாதாட அனுமதிக்குமாறும் நீதிமன்றத்தை ஷாபாஸ் ஷெரீஃப் கேட்டுக் கொண்டாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.