உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 கோடிக்கும் மேலானவா்களுக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தை நெருங்கியது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 99,593-ஆக உள்ளது.உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,09,208 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 1,41,441 பேரும், இந்தியாவில் 94,503 பேரும் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.