உலகம்

கரோனா பலி 20 லட்சத்தைத் தாண்டலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

DIN

கரோனா தடுப்பூசி பரவலாக விநியோகிக்கப்படுவதற்கு முன்னா் உலகம் முழுவதும் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் அவசரக் காலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் கூறியதாவது: கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வருவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது.

அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட தீவிரமாக அதிகரிக்கும்.கரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்கு முன்னா், அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காகக்கூடும். அந்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.கரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் மட்டுமன்றி, அந்த நோய்த்தொற்றின் பரவல் பாதையைக் கண்டறிதல், சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவதல் ஆகிய பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டியதும் இன்றியமையாதது ஆகும் என்றாா் அவா்.சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் - பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் - போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் - போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த நாட்டில் மட்டும் - போ் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT