உலகம்

மெக்சிகோவில் 75 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பலி

DIN

மெக்சிகோவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியது.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் மெக்சிகோவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 5,408 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 7,15,457 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் பலியாகியுள்ளனர். 

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 75,439 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மெக்சிகோவில் கரோனா தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை அக்டோபரில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT