மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவில் சொந்தமாக நிலம் வாங்கியிருந்த தகவலை அறிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர், தனது மனைவிக்காக நிலவில் இடம்வாங்கி பரிசளித்துள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் மட்டுமல்லாமல், பல பிரபலங்கள் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்து வாங்கியிருக்கும் நிலையில், அந்த முக்கிய நபர்களின் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரும் இணைந்துள்ளார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சோயப் அகமது, நிலவில் உள்ள 'சீ ஆஃப் வேப்பர்' என்று பெயரிடப்பட்ட பகுதியில் 45 டாலருக்கு சர்வதேச நிலவின் நிலப்பகுதி பதிவுத் துறையின் மூலம் வாங்கியுள்ளார். அதற்கான சொத்துப் பத்திரத்தையும் அவர் வைத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சோயப் அகமது, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவில் நிலம் வாங்கியிருந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, நானும் நிலம் வாங்க முடிவு செய்தேன் என்கிறார்.
இதுபோலவே, சில மாதங்களுக்கு முன்பு பிகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், தனது பிறந்தநாளை முன்னிட்டு நிலவில் நிலம் வாங்கியிருந்தார். நிலவுக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை, ஆனால் அது நிறைவேறுமா என்று தெரியவில்லை. அதனால் நிலவில் நிலம் வாங்கியிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் போலவே, டாம் க்ரூஸ், ஷாருக் கான், ஜான் டிராவோல்டா, நிகோல் கிட்மான் ஆகியோரும் நிலவில் நிலம் வாங்கியிருக்கிறார்கள்.