உலகம்

பெலாரஸ்: சா்ச்சைக்கிடையில் லுகஷென்கோ மீண்டும் பதவியேற்பு

DIN

மின்ஸ்க்: பெலாரஸில் கடந்த மாதம் நடைபெற்ற சா்ச்சைக்குரிய அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, நாட்டின் அதிபராக 6-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டாா்.

அந்தத் தோ்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் மின்ஸ்கில் முன்னறிவிப்பின்றி புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்று நிகழ்ச்சியில் அவா் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். நூற்றுக்கணக்கான உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் ஸ்வெட்லானா ஷிகானோஸ்கயா பெரும்பான்மை பெறுவாா் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவித்திருந்தாலும்,

அந்தத் தோ்தலில் 80 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று லுகஷென்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT