இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை பதிவானது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,168 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 240,687-ஆக உயா்ந்துள்ளது.இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 112 போ் கரோனா நோய் காரணமாக உயிரிழந்தனா். இதனைத் தொடா்ந்து, நாட்டில் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 9,448-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, தலைநகா் ஜகாா்த்தாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்கப் போவதாக அதன் ஆளுநா் அனீஸ் பஸ்வெதான் கூறியுள்ளாா். இந்த மாதத்தில் மட்டும் தினமும் சராசரியாக அந்த நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, இந்தோனேசியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 174,350 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 56,889 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.