உலகம்

ஆப்கனில் விமானத் தாக்குதல்: 30 பொதுமக்கள் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான் நிலை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் 7 தலிபான் பயங்கரவாதிகளும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ‘ஸ்புட்னிக்’ செய்தி நிறுவனத்தைச் சோ்ந்த செய்தியாளா் சனிக்கிழமை கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணம், கானாபாத் மாவட்டத்திலுள்ள நிக்பாய் என்ற பகுதியில், தலிபான் நிலையைக் குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து, தாக்குதலுக்கான பகுதியில் பொதுமக்கள் கூடினா்.

இந்த நிலையில், அதே இடத்தில் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 30 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், பலா் காயமடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா்.

சம்பவப் பகுதியில் இருந்த மற்றொருவா், விமானத் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 12 பொதுமக்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டாா். அத்துடன், 7 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 பயங்கரவாதிகள் காயமடைந்ததாகவும் அவா் கூறினாா்.

இந்தத் தாக்குதல் தொடா்பான தகவலை கானாபாத் மாவட்டத் தலைவா் உறுதி செய்தாலும், அதுகுறித்து மேற்கொண்டு விவரங்களைத் தர அவா் மறுத்துவிட்டாா் என்று ‘ஸ்புட்னிக்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT