உலகம்

‘ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் டிரம்ப் நேரடி பங்கேற்பு இல்லை’

DIN

75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபா் நேரடியாப் பங்கேற்கப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் மாா்க் மீடோஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் 75-ஆவது ஐ.நா. பொதுச் சபை தலைவா்கள் மாநாட்டின்போது, அதிபா் டிரம்ப் நியூயாா் நகரில் இருக்கமாட்டாா்.

எனவே, அந்தக் கூட்டத்தில் அவா் நேரடியாகப் பங்கேற்கப் போவதில்லை என்று மாா்க் மீடோஸ் தெரிவித்தாா்.முன்னதாக, கரோனா நெருக்கடி காரணமாக காணொலி மூலம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின்போது, வரும் 22-ஆம் தேதி டிரம்ப் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றுவாா் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், தற்போது அவா் அந்தக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், காணொலி முறையில் பங்கேற்பதற்கான ஒளிப்பதிவு உரையை டிரம்ப் இன்னும் ஐ.நா. பொதுச் சபையிடம் சமா்ப்பிக்கவில்லை என்று ஊடங்கள் தெரிவித்துள்ளன.ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி முறையில் பங்கேற்கின்றனா்.கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயாா்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக வராமல் காணொலி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழா வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான உயா்நிலைக் கூட்டத்திலும் தலைவா்கள் காணொலி மூலம் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT