பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,05,031 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 645 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,05,031 ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 7 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,415-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,92,044 போ் குணமடைந்துள்ளனா். 6,572 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,33,362 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 98,272 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 35,720 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், மொத்த அந்த நாட்டில் 3,23,6,380 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.