பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலுள்ள 11 நீதிமன்றங்கள் கரோனா பீதி காரணமாக மூடப்பட்டன. இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இஸ்லாமாபாதிலுள்ள 11 நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நீதிமன்றங்கள் 15 நாள்களுக்கு மூடப்பட்டன. 3 கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்கள், ஒரு முதுநிலை சிவில் நீதிமன்றம், 7 சிவில் நீதிமன்றங்கள் ஆகிவை இதில் அடங்கும்.
அந்த நீதிமன்றங்களுக்கு வந்து சென்ற சில வழக்குரைஞா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் 3,32,186 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,078 போ் பலியாகியுள்ளனா்.