உலகம்

ஜப்பான்: லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

DIN

ஜப்பானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்தைத் தாண்டியது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 808 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,00,334-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில், ஜப்பான் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசுக் கப்பலின் 712 கரோனா நோயாளிகளும் அடங்குவா்.

புதிய நோயாளிகளில் 3-இல் ஒருவா் டோக்கியோவைச் சோ்ந்தவா்; அந்த நகரில் மட்டும் வியாழக்கிழமை 221 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT