வியட்நாமில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள்.
மத்திய வியட்நாமின் நம் டிரா மை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 46 பேர் மாயமானார்கள். தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.