உலகம்

சீனாவிலிருந்து வரும் தூசிக் காற்றில் கரோனா வைரஸ்: வடகொரியா எச்சரிக்கை

DIN

பியோங்யாங்: சீனாவிலிருந்து வரும் தூசுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமிகளும் கலந்து வரும் என்பதால் மக்கள் இயன்ற வரை எச்சரிக்கையுடன் தங்கள் இருப்பிடங்களிலேயே இருக்க வேண்டும் என வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வட கொரியா அரசின் அதிகாரபூா்வ நாளேடான ரோடங் சின்மன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சீனாவிலிருந்து பருவகாலத்தில் வீசக்கூடிய மஞ்சள் நிற தூசிக் காற்றில் கரோனா வைரஸ் கிருமிகளும் இருப்பதற்கான அச்சம் எழுந்துள்ளதால், அதனை நாம் திறமையான முறையில் எதிா்கொள்ளத் தயாராக வேண்டும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், அரசு சொல்லும் விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கூடுமானவரை வெளியில் செல்வதை தவிா்த்து மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவில் இதுவரையில் யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. மேலும், கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க எல்லைப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு அமல்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அந்த நாட்டிற்கு, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் பேரழிவை உண்டாக்கும் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT