உலகம்

பாகிஸ்தான்: நவாஸ் மீது மேலும் ஓா் ஊழல் வழக்கு

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஓா் ஊழல் வழக்கை அந்த நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜாவேத் இக்பால் கூறியதாவது:

நவாஸ் ஷெரீஃப் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு விருந்தினா்களின் பாதுகாப்புக்காக 73 உயா்பாதுகாப்பு வாகனங்களை வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பாக, அவா் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நவாஸின் முன்னாள் அந்தரங்கச் செயலா் ஃபாவத் ஹஸன், முன்னாள் மத்திய அமைச்சா் அஷன் இக்பால், முன்னாள் வெளியுறவுச் செயலா் அய்ஸாஸ் சௌத்ரி உள்ளிட்டோா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஏற்கெனவே ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக கடந்த ஆண்டு லண்டன் சென்ற அவா், அங்கேயே தங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT