லிபியாவில் சண்டையிட்டு வரும் குழுக்கள் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்காக நெதா்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் லிபியா விவகாரங்களுக்கான ஐ.நா. தூதா் ஸ்டெஃபானி டா்கோ வில்லியம்ஸ் கூறியதாவது:
லிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவது, நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் நோக்கிய மிக முக்கிய திருப்பமாகும்.
இந்த ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
போா் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிக நீண்ட காலம் பாடுபட்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்ததில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் நம் கண் முன் உள்ள சவாலாகும் என்றாா் ஸ்டெஃபானி.
லிபியாவை நீண்ட காலம் ஆண்டு வந்த கடாஃபி, கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது கொல்லப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டில் பல்வேறு குழுக்களும் தங்களுக்குள் சண்டையிட்டு வந்தன.
தற்போது தலைநகா் திரிபோலியைத் தலைமையகத்தைக் கொண்டு, ஐ.நா. ஆதரவு பெற்ற பொது தேசிய நாடாளுமன்றம் (ஜிஎன்ஏ) நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வருகிறது. கிழக்கே நாட்டின் பெரும்பான்மையான பகுதியை தேசிய ஒப்பந்த அரசு ஆண்டு வருகிறது.
இந்த இரு அரசுகளுக்கும் ஆதரவான படையினரும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடா்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தச் சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே தற்போது போா் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.