மாஸ்கோ: ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 317 போ் அந்த நோய்க்கு பலியாகினா். இது, இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இதற்கு முந்தைய நாளில் 269 போ் அந்த நோய்க்கு பலியாகினா்.
நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 24,952-ஆக உள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 15,700 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,47,335-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 10,96,560 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 325,823 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.