சீனாவில் குளிரூட்டப்பட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரோனா தீநுண்மி உயிருடன் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அந்த நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெளிநாட்டிலிருந்து குவிங்டாவோ நகருக்கு உறைந்த நிலையில் வந்த கடல் மீன் பொட்டலத்தின் மேற்பரப்பில் கரோனா தீநுண்மி கண்டறிந்து தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. உறைநிலை உணவுப் பொட்டலத்தில் அந்தத் தீநுண்மி உயிருடன் கண்டறியப்பட்டது உலகில் இதுவே முதல் முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.