பப்புவா நியூ கினியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டா் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் என்னுமிடத்தில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.1 அலகுகளாகப் பதிவானது.
கடலுக்கு 90 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.