மெக்சிகோவில் இன்றைய நிலவரப்படி கரோனாவுக்கு சுமார் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மெக்சிகோவில் நவ.30 பாதிப்பு நிலவரத்தை அந்த நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மெக்சிகோவில் புதிதாக 6,388 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,7,071 ஆக உள்ளது.
ஒரேநாளில் மேலும் 196 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,05,655 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.