ஆப்கானிஸ்தானில் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
கஸ்னி ராணுவத் தளம் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் வெடித்ததில் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
கஸ்னி மாகாண சுகாதாரத் துறைத் தலைவர் ஜாஹிர் ஷா நிக்மலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார்.
ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.