ஆா்ஜெண்டீனாவில் கரோனா பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,846 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,07,277ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 12,35,257 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 1,33,804 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 275 பேர் பலியானார்கள்.
இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 38,216ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.