ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,543 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 27,543 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 22,15,533 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கடந்த இரு தினங்களாக ஒருநாள் பலி எண்ணிக்கை 500யைத் தாண்டி பதிவான நிலையில், இன்று பலி 500க்கு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் உள்பட இதுவரை 38,558 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை 17,12,174 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,64,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.