இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்புணா்வுக்கு ஆளாக்குவோரைத் தூக்கிலிடுவது, அவா்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது ஆகிய தண்டனைகளுக்கு வழி வகுக்கும் இரண்டு அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
‘பாலியல் பலாத்காரம்’ என்பதற்கான வரையறையையும் மாற்ற அமைச்சரவை ஒப்புக்கொண்டது.