கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அருங்காட்சியகங்களும் விலங்கியல் பூங்காக்களும் மறுபடியும் மூடப்பட்டன.
வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகமும் விலங்கியல் பூங்காவும் மூடப்பட்டது.
கரோனா காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள், அனைத்து அருங்காட்சியகங்களும் விலங்கியல் பூங்காக்களும் மூடப்பட்டன.
பின்னர், ஜூலை தொடக்கம் இவை ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டபோதிலும் கரோனா மறு அலை காரணமாகத் தற்போது அனைத்தும் மூடப்பட்டுள்ளன.