தலிபான் தீவிரவாதக் குழுவினருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேச்சு நடத்தினார்.
கத்தாரில் தோஹா நகரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தலிபான் குழுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரைச் சந்தித்துப் பேசினார் மைக் பாம்பியோ.
ஆப்கன், தலிபான் ஆகிய இரு தரப்பினரும் வன்முறைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பாம்பியோ கேட்டுக்கொண்டார்.