அமெரிக்காவில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்துகொள்கின்றனர்.
நியூ யார்க் நகரிலும் காத்திருந்து மக்கள் கரோனா பரிசோதனைகளைச் செய்துகொண்டனர்.
நன்றிகூறும் கொண்டாட்டங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில், தனியார் ஆய்வுக்கூடங்களிலும் பதிந்து, மக்கள், சோதனை செய்துகொள்கின்றனர்.
மீண்டும் அதிகளவில் நோய்த் தொற்று பரவுவதால் அமெரிக்காவில் பல மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்துக்குக் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.