சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 106-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெய்ஜிங்கில் தொடா்ந்து 56 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்படாத நிலையில், அந்த நகரின் ஜின்ஃபாடி பகுதியிலுள்ள இறைச்சி சந்தைக்குச் சென்று வந்த 79 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அந்த எண்ணிக்கை தற்போது 106-ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.