ஜூன் 7ஆம் நாள் முதற்கொண்டு 3ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப்
பொருட்காட்சிக்கு இன்னும் 150 நாட்கள் இருக்கும் நிலையில்,
இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளவுள்ள தொழில் நிறுவனங்கள் வணிகக்
கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் நடைமுறை முன்னேற்றங்களைக்
கண்டுள்ளன.
இந்நிலையில், கண்காட்சியின் திட்டமிடப்பட்ட நிலப்பரப்புப்
பகுதியில் 90 விழுக்காட்டுக்கும் மேலான பகுதி ஒப்பந்தங்கள் மூலம் உறுதி
செய்யப்பட்டுள்ளன.
அதோடு, இப்பொருட்காட்சியின் முக்கிய அரங்கான
தேசியக் கண்காட்சி மையம் இந்தவார இறுதியில் 'தேசியக் கண்காட்சிச்
சந்தையை' திறக்கவுள்ளது.
இதில், உயர் தரமிக்கப் பல உற்பத்திப் பொருட்கள், சீன நுகர்வோர்களுக்காக முன்னதாகவே காட்சிப்படுத்தவுள்ளன.
தகவல்:சீன ஊடகக் குழுமம்