சிங்கப்பூரில் மேலும் 481 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 481 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் ஒருவருக்குக் கூட சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த் தொற்றவில்லை. அவா்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,369-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 45,352 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.