உலகம்

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம்

IANS

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91)  உடல்நலக்குறைவின் காரணமாக கெய்ரோவில் செவ்வாயன்று மரணமடைந்தார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு துவங்கி முப்பது ஆண்டுகளாக எகிப்து அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக். ஆனால் 2011-ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியின் மூலமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.        

அவரது அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார்.    

சமீபமாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கெய்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் செவ்வாயன்று மரணமடைந்தார் என்று பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT