உலகம்

நிலவில் தேசியக் கொடியை ஏற்றியது சீனா

DIN


பெய்ஜிங்: தனது தேசியக் கொடியை சீனா நிலவில் ஏற்றி சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா தனது தேசியக் கொடியை நிலவில் ஏற்றி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இரண்டாவது நாடாக சீனா இந்தப் பெருமையை பெற்றுள்ளது.

சீனாவின் சாங்கி-5 விண்கலம் கடந்த நவ.23-ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவில் மணல் மற்றும் கற்களை சேகரித்து வருவதற்காக அந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷியாவையடுத்து நிலவில் இருந்து கற்களை சேகரிப்பதற்காக 3-ஆவது நாடாக சீனா அந்த விண்கலத்தை அனுப்பியது. கடந்த டிச.1-ஆம் தேதி அந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மணல் மற்றும் கற்களை சேகரித்துக் கொண்டு அந்த விண்கலம் கடந்த டிச.3-ஆம் தேதி இரவு பூமியை நோக்கிப் புறப்பட்டது. இந்தக் கற்களை கொண்டு நிலவின் காலத்தைக் கண்டறிய சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில் சாங்கி-5 விண்கலத்தின் பயணத்தின்போது நிலவில் 2 மீட்டா் அகலம், 90 செ.மீ. நீளம் கொண்ட தனது தேசியக் கொடியை சீனா ஏற்றியுள்ளது. நிலவில் ஏற்றிய தேசியக் கொடி புகைப்படத்தை சீன தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT