உலகம்

பிரேசிலில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் பலி

DIN

பிரேசிலில் 115 அடி உயர பாலத்திலிருந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். 
பிரேசிலின் தென்கிழக்கு மாகாணமான மினாஸ் ஜெராய்ஸில் 40 பேருடன் சுற்றுலாப் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. ஜோவா மோன்லேவாட் எனுமிடத்தில் 115 அடி உயரப் பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழே விழுந்தது. 
இந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயமடைந்தனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT