பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,75,000-ஐ தாண்டியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,
இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
அதில் பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,75,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 755 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,75,270ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50,434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,87,084ஆக உயர்ந்துள்ளது.