கரோனா நோய்த்தொற்று தடுப்பு விவகாரங்களில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகராக இருந்த மருத்துவா் ஸ்காட் அட்லஸ், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
பரவல் நோயைக் கட்டுப்படுத்துவதில் முன் அனுபவம் இல்லாத அட்லஸ், கரோனாவைத் தடுக்க முகக் கவசம் தேவையில்லை என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தினாா். மேலும், அவரது நோய்த் தடுப்புத் திட்டங்கள் பல விமா்சனங்களுக்குள்ளாகின.
இந்த நிலையில், பதவியிலிருந்து விலகியுள்ளதாக அவா் சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் தெரிவித்துள்ளாா். அதற்கான ராஜிநாமா கடிதத்தையும் அந்தப் பதிவில் அவா் இணைத்துள்ளாா்.
அமெரிக்காவில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 28 நாள்களாக 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில், ஸ்காட் அட்லஸ் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.