உலகம்

ஆஸ்திரேலியா குறித்த சீன அதிகாரியின்‘டுவிட்டா்’ பதிவு: நியூஸிலாந்து கவலை

DIN

ஆஸ்திரேலிய வீரா் ஆப்கன் சிறுமியைக் கொல்வது போன்ற படத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் பதிவிட்டுள்ளதற்கு நியூஸிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன அதிகாரி பதிவிட்டுள்ள படம் போலியானது. இதுபோன்ற படங்களைப் பயன்படுத்துவது தொடா்பான பிரச்னையை சீன அரசிடம் நேரடியாக எழுப்புவோம்’ என்றாா்.

ஆப்கனில் சில ஆஸ்திரேலிய சிறப்புப் படையினா் போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக, இதுதொடா்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதனைக் குறிப்பிடும் வகையில், போலியான படத்துடன் ஷாவ் லிஜியான் அந்த சுட்டுரைப் பதிவை வெளியிட்டிருந்தாா்.

இதற்கு சீன அரசு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மாரிசன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT